உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Apr 30, 2011

April 2011

வாழ்க்கை எளிமையானது
உன்னுடன் அழகானது


எமது பயணம் சிறப்பாய் இருந்தது
அவளையும் பார்த்திருந்தால் அழகாய் இருந்திருக்கும்


சுந்தரச் சித்திரமாய் வந்த பெண்ணே
சிறகுடன் வா
செவ்வானம் தாண்டிச்  செல்வோம் வா
செழுமையான வாழ்க்கை காண்போம்


என் சுவாசக் காற்று அவள் சிந்தையில்
செல்லமாய் சுட்டியாய்
ஒரு கொட்டு
 கொட்டியதால்
அவள் விழித்தெழுந்தாளோ?


பேரொளியுள்ள உன் புன்னகையை எதிர்த்துப் போராடப் போராளியில்லை
ஒலியில்லா உன் புன்னகைக்கு எதிரொலி உண்டு
என்றென்றும் பேணிப் பார்த்துக்கொள்கிறேன் என்னிடம் கொடுத்துவிடு
தொட்டுவிடுவேனோ என்று நினைத்தாயோ தொலைவிலேயே நிறுத்திவிட்டாய்
தொல்லை தர மாட்டேன் தொண்டாற்றிக் கடன் தீர்க்கிறேன்
தங்கத் தாமரையே இனியும் தாமதம் செய்யாதே


தங்கத் தமிழச்சியே  தரணியில் வந்தவளே
தாமரைப்பூ குளத்தில் தவழ்பவளே
நெஞ்சத்தில் நேசம் விதைத்தவளே
நெருங்கி வந்த பொழுது நெருப்பாய்க் கொதித்தாயே!


என் நெஞ்சம் காணும் வாழ்க்கை
உன் கையில் உள்ளது
உன்னைக் கைப் பிடித்துச் செல்ல
கரங்கள் காத்திருக்கின்றன
காலம் சென்றாலும் - அவை
கனவுகளை எடுத்துச் செல்லவில்லை
என் கனவுகள் கற்பனைகள் அன்று
உன்னுடன் கண்ட வாழ்க்கை
கண்ட கனவுகளைக் காண
வாழ்நாள் போதாது
போதிய காலம் இல்லை
பொன் மகளே வா!
பூஞ்சோலையில் காத்திருக்கிறேன்
பௌர்ணமிக்குள் வா!!
கனவுகளைக் கொண்டாடலாம்.


கண்ணீர் கலந்து கடல் நீர் கரித்ததோ?
சுவாசம் முகர்ந்து பூக்கள் மலர்ந்தனவோ
உரை கேட்டுக் கிளிகள் பேசினவோ
நீ விழித்ததனால் கதிரவன் உதித்தானோ?


கடலில் முழ்கி மறைந்தாலும்
மலையின் பின் மறைந்தாலும்
கண்ணே நீ என்னை நினைத்த
மறு கணம் உதிப்பேன்


மாசியிலும் ஐப்பசியிலும் மழை
மனம் குளிரச் செய்யும் - மங்கையே
உன் சிரிப்பொலியைச் சொன்னேன்


காற்றின் பருவம் அறிந்து பூக்கள் மலரும்

என் மனம் உணர்ந்து நீ மொழிவாயோ ??


Apr 1, 2011

பாலை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
விண்ணில் நட்சத்திரங்கள் இருப்பது பிடிக்கவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
மழலையின் உறக்கம் தனை ரசிக்க முடியவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
மலைகளில் பயணம் செய்யும் பாதை பிடிக்கவில்லை

உன் விழி செய்த மாயம் என்ன பெண்ணே
உன் மௌனம் தனை ஏற்க முடியவில்லை

வெண்ணிலவே மேகத்துள் ஒழிந்து கொண்டாலும் உன்னை நான் அறிவேன்
மேகம் சிறிது நாழிகை கழித்து உன்னிடம் இருந்து விலகி செல்லும் கைவிடும்
என் கண்பார்வையில் தான் இருப்பாய்
என்னுடன் வந்துவிடு என்றும் உன்னை விலகி செல்ல மாட்டேன்

நீ ஒரு துளி எடுத்து சவரில் தெளித்தாலே ஓவியம்!!

குறுகிய சாலையில்
பூமரம் கண்டேன்.
நிலவை நோக்கி
கடலில் நீந்துவதா
நிழலில் நிற்பதா.
நேற்றோர் முடிவெடுத்தேன்
முயற்சிக்கிறேன்
முறிவேனோ தெரியவில்லை
முந்நூறு நாட்கள்
பின்பு காண்போம்

ஆயிரம் கவி எழுதினாலும்
அர்த்தம் ஒன்று தான்
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு
பிடிச்சிருக்கு
நிறைய நிறைய
நிறையா பிடிச்சிருக்கு

ஒரு நாளைக்கு நாலு வாட்டி பசிக்குது
எட்டு மணிநேரம் தூக்கம் வருது
தினமும் பொறுமையா பல்லு வேலக்கி
நிதானமா குளிக்றேன்
அரை மணிநேரம் பேப்பர் படிக்கறேன்
விட்டத்த பாத்து யோசிக்கிறேன்
யாருக்காது போன் பன்னி பேசறன்
இதேலான் நல்லாவா இருக்கு
வயசு பசங்க பன்ற காரியம் மாதிரி யார் இருக்கு

மழைத்துளி ஈரம் காற்றில் ஒட்டிக்கொள்ளும்
உன் சிரிப்பொலி என் நெஞ்சில் குடிகொள்ளும்

நேற்று நிலவை கண்டேன்
நிலவில் உன்னை கண்டேன் - உன்
நிழலில் என்னை கண்டேன்

ஆகாய வெண்ணிலாவில் அர்த்தமில்லை
அஹிம்சை முறையில் வெற்றியில்லை
உன் தாண்டவம் கண்டால் -தாரை
தாரையாய் கண்ணீர் வருகுதடி
உன்னுடன் ஆனந்தம் காண
மனம் ஏங்குதடி - மந்திரச்
சொல் உதிர்வாய்ப் பெண்ணே
மாலை இட்டுக் கொள்வோம்

ஓவியம் பழகலாம் காவியம் பழகலாம்
ஆனால் காதல் நீ இல்லாமல் பழக முடியுமோ ?

மருதம்

இலைகள் துளிர்ந்து
விழிகள் விரிந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

பூக்கள் மலர்ந்து
சுவாசம் முகர்ந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

கிளிகள் பேசி
செவிகள் சிவந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

மழலைகள் சிரித்து
உதடுகள் விரிந்து
மனம் மகிழ்ச்சி கொள்ளட்டும்

நாம் கைகோர்த்து
மனங்கள் இணைந்து
நமது உள்ளம் பரவசம் கொள்ளட்டும்

கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளைகளில் நான்
துள்ளி துள்ளி வருகையில்
இருபுறமும் நின்று வழி விடுவார்கள்

ஆனால் நீ
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை என்று
நிற்காமல் விழி அசைக்கிறாய்
விழியில் வீழ்ந்தேன்
இனி என்னில் வலுவில்லை
நல் விடை கொடு ஷ்வேதமே

ஓர் காவியம் தரும் அணைத்து இன்ப துன்பங்களையும் உன் பெயர் தருகிறது
இச்சுந்தர காவியத்தை (உன் பெயரை) வாசிக்கிறேன்,  சுவாசிக்கிறேன், உச்சரிக்கிறேன் கணக்கில்லாமல்
ஆயினும் இன்று வரை உன்னை புரிந்துகொள்ள முடியவில்லை கமலமே!

என்ன எழுதுவது என்று அறியேன்
எதை எழுதுவது என்று அறியேன்
எண்ணி பார்க்கிறேன் எதுவும் தோன்றவில்லை
இப்புலம்பலையும் எழுதுகிறேன்
தேரில் வந்தாயே தாமாரையே எப்பொழுதும் சூரியனை நோக்கிக்கொண்டு
உன் புன்சிரிப்பில் புலனைந்தும் நின்றதடி
இடைவேலி நம் மனதிற்கு மட்டும் அல்ல
மேகத்திற்கும் கடலிற்கும் தான்

மேகத்துள் மறைந்து கொண்ட நீரை போல்
இவ்வலையுகத்தில் மறைந்து கொண்டேன் அடா

முல்லை

உன் நிழல் இந்த வலையில் விழ என்ன பேறு செய்ததோ

மாலை அவள் வரவில்லை
மனம் இம்மெய்தனை ஏற்கவில்லை
மதி இயங்கவில்லை
மணமகள் மணவாளனை மெச்சிக் கொள்ளவில்லை
மனித குலத்தில் மற்றவர் யாவும் பிடிக்கவில்லை

செல்லும் இடம் எங்கும் எட்டுத்திசையிலும் எட்டிப்பார்க்கிறது என் கண்கள்.

உன் கையில் கையால் ஒரு பிடி சோறு கிடைக்குமா கண்மணியே?

மணமறியாது குணமறியாது உண்கிறேனடி
வானமறியாது பூமியறியாது குதிக்கிறேனடி
பாசமறியாது நேசமறியாது பழகுகிறேனடி
மொழியறியாது எழுத்தறியாது பேசுகிறேனடி
ராகமறியாது தாளமறியாது பாடுகிறேனடி
மழையறியாது வானவில் அறியாது மயிலாய் ஆடினேனடி
இரவறியாது பகலறியாது மழலையாய் இருக்கிறேனடி ஷ்வேதமே!

பார்ப்பதில்லை பார்ப்பதில்லை பாறேங்கிலும் உன்னை பார்ப்பதில்லை
நோக்குவதில்லை நோக்குவதில்லை ஒரு நொடி கூட உன்னை எதிரே நோக்குவதில்லை
பேசுவதில்லை பேசுவதில்லை உன்னுடன் மனதிற்குள் பேசுவதில்லை
கேட்பதில்லை கேட்பதில்லை உன் சுந்தர தமிழ்தனை கேட்பதில்லை
உண்ணுவதில்லை உண்ணுவதில்லை உன்னை நினைத்துக்கொண்டு உண்ணுவதில்லை
செய்வதில்லை செய்வதில்லை உன்னை பற்றிய சிந்தனையோடு ஒரு வேலையும் செய்வதில்லை
நித்திரையில்லை நித்திரையில்லை நின்னை நினைத்துக்கொண்டு நித்திரையில்லை
எழுதுவதில்லை எழுதுவதில்லை உன்னை பற்றி ஒரு கவி கூட எழுதுவதில்லை
தேடுவதில்லை தேடுவதில்லை கடை ஊழியர் அடையாள அட்டையில் உன் பெயர் தேடுவதில்லை
கொள்வதில்லை கொள்வதில்லை வெண்கமலத்தின் மேல் காதல் கொள்வதில்லை
சொல்வதில்லை சொல்வதில்லை இனி ஒரு பொய்யும் சொல்வதில்லை

என் இதயத்தை எடுத்து ஒரு வினாடி(விநாடி) காகிதத்தில் வைத்தால் உன் முகம்தனை ஓவியமாய் காண்பாய்

கார்மேகமாய் கனவில் நினைத்துக்கொள் அடை மழையாய் வீசுவேன்
கருங்குயிலாய் கனவில் நினைத்துக்கொள் கானமாய் இசைப்பேன்
களவாணியாய் கனவில் நினைத்துக்கொள் உன் மனதை களவாண்டு விடுவேன்
காதலனாய் கனவில் நினைத்துக்கொள் உன் பாது காவலனாயும் இருப்பேன்

கால்கள் கடக்கும் இடங்களை(மற்றும் நாட்களை)  பயணம் என்றால், மனம் சுற்றும் நாட்களை என்னவென்று கூறுவாய் ?

(தபுக்குனு பேசினு/தூங்கினு இருக்கும் போது தாலிய கற்றது ஓல்ட் பேஷன்)
உங்க அப்பாக்கிட்ட பேச ::: நறுக்குன்னு ரத்தம் வர மாதிரி உன் உச்சம் தலைல கொட்டினா உங்க அப்பா வந்து என் கிட்ட பேசுவாருல ??....

என் கவிதை புரியவில்லை என்றாலும் முன்பு போல் என்னுடன் பேசுகிறாய்
என் காதல் புரியவில்லை என்றாலும் என்னுடன் முன்பு போல் போல் பேசடி

கண்களை மூடி கொண்டு கண்களை பறித்துகொண்டாய்
மனதை உள் வைத்துக்கொண்டு என் மனதை பறித்துகொண்டாய் தாமரையே!

கண்களை மூடி கொண்டு கண்களை பறித்துகொண்டாய்
மனதை உள் வைத்துக்கொண்டு  என் மனதை பறித்துகொண்டாய் தாமரையே!
இது தகுமோ? இது முறையோ? இது தர்மம் தானோ?

பல பேர் இருந்தா எல்லார்கிட்டையும் பேசி புரியவெச்சு ஒர்த்தவங்க கிட்ட சம்மதம் வாங்கறதுக்கு நிறைய நேரம் ஆகும்.
அதே, ஒன்னே ஒன்னு இருந்தா அவங்க கிட்ட பேசி புரியவெச்சு பழகறதுக்கு நிறைய நேரம் இருக்கும். தினமும் இதை போன்ற மனப்பான்மையோடு ஒர்த்தவங்கள நினைச்சுனு இருந்தா கண்டிப்பா அவுங்க உங்களுக்கு கிடைப்பாங்க.நாளை சந்திப்போமா

எனக்காக உனது விழியில் ஒரு துளி என்றால்
மரண படுக்கையிலும் உறங்குவேன் கண்மணியே

உன்மேல் சொட்டுச் சொட்டாய் சிந்துதடி வானம்
சொன்னால் நம்புவாயோ? ஒவ்வோர் துளியிலும் அன்பை கலந்துளேன் அடி

முதலில் நட்பை இழக்க கற்றுக்கொண்ட பிறகு காதலியிங்கள்

மாதமோ தை 
இந்நேரமோ மெய்
உன் கோபம்மோ பொய் 

மழலையை ரசித்தேனே மனம் சரிந்தேனே

அவரவர் வாழ்க்கையில் அவரவர் பயணிப்போம் என்றாள், ஆயினும் வாழ்க்கை என்பது யாதென அறியேன் நானே, விடைதேடி வந்தேன் இங்கே. கிட்டுமா என்று சற்றுப் பொருத்திருந்து பார்ப்போம்

வெள்ளிக்கம்பலத்தில் வெண்ணிலா மிதந்து வந்தால்(வந்தாள்)
வேங்கை அவன் காதல் கொள்வானோ
காவியம் எழுதுவானோ அவள்
கயல்விழி கதை சொல்லுமோ
காலம் பதில் சொல்லுமோ

அடைமழை கண்டேன் அனல்குளிர் கண்டேன்
ஆயினும் அன்பே நின் அன்பின் கண்ட பரவசம் இவையில் காணோம்

வெண் தாமரையே வாஞ்சி நிலவே
திருவாய் மலர்வாய்

வைரப் பாலைவனத்தில் நிற்கும்
கருகிய முற்களில் இலை துளிராதோ
காட்டுத்தனமாய் துளிரும்
நம்பிக்கையுடன் சுவாசிக்கிறேன் நறுமுகையே

உணர்ந்த தருணமே இழந்தேன்
என் நெஞ்சம் எங்கேன அறிவாயோ?

எங்கிருந்து வந்தாய்
எமலோகத்தில் இருந்து வந்தாயோ
இப்படி கொல்கிறாய்

மழைத்துளி பனித்துளியை சுட்டதடி
பனி மெல்ல கறைந்து மடிந்ததடி
மேகம் அழுது மடிந்ததடி
மழையே உருக்கொண்ட மேகமுடன் சேரவில்லை
பனியிடமும் சேரவில்லை
நீரோடையாய் எங்குசெல்கிறாய் கண்மணியே

நெய்தல்

எதுகையும் மோனையும்
உன் எழில் கொஞ்சும் சிரிப்பும்
கைகோர்த்தால் கவிதையடி

பனி காலைப் பொழுதில்
இலையில் பனி துளியில்
உன் முகம் தெரிந்தது

கோடையில் மண்ணில்
இரவில் நடு இரவில்
நடுநிசியில் பனியில்
நதியில் வழியில்
வழியில் பரிசலில்
பரிசலில் முழுமதியில்
கரையில் அருகில்
அருகில் மலையில்
மலையில் மலைகுகையில்
மனதில் விண்ணில்
என் எதிரே உன் விழியில்
வெண்ணிலாவில் மாலையில்
மர நிழலில் (கைகோர்த்து)   உலாவையில்
மழையில் குடையில் நனைகையில்
தனிமையில் உன் சிரிப்பில்
கண்ட அமைதியில் பேரானந்தம் அடி

மங்கை அவள் கை பிடிக்க
மணவாளன் நெஞ்சம் நெகிழ
அவன் கண்ணில் நீர் வழிய
இருவர் உள்ளமும் உருக
சட்டென்று சில்லென்ற மழையில் நனைய
என இருவரின் அறுபதாம் மணநாள் நிகழ்ந்தது!

அய்யோ கடவுளே, இக்கணமே இம்மண்ணிலே மீண்டும் நான் பிறக்கிறேன், அவளுக்கு மகனாக - உடனே என்னை கொன்று விடு (அத்திருகாரியத்தை அவளிடம் விட்டு விடு)

@2088 வீடருகே உள்ள ஓர் பூங்காவிருக்கு வந்தேன்
அங்கே மரங்கள் அமைந்த பாதையில் நடந்தேன்
 மர நிழல் கொண்ட ஓர் திண்ணையில் இளைப்பாறினேன்
சிறிது நேரம் கழித்து சில பூக்கள் என் அருகில் விழுந்தன
மரங்களிடம் கேட்டேன் 'எதற்கென்று?"
"மரங்கள்" அவளின் கல்லறையில் சேர்த்துவிடு?"

ஏக்கங்கள் வந்ததடி ஏனெனில்
உன் மேல் எண்ணங்கள் வந்ததடி

பொய் அவள் விழியினிலே
கள்ளம் அவள் சிரிப்பினிலே
கார்மேகம் அவள் மழையினிலே
நிலவு அவள் நடுநிசியினிலே
கற்பனை கவிஞனின் வரியினிலே
மழலை அவள் உள்ளம்தனிலே
மூதாட்டி அவள் அறிவுதனிலே
மின்னல் அவள் நெற்றியினிலே
தேன் சுவை அவள் நாவினிலே
நேசம் அவள் பேச்சினிலே
வாள் அவள் பார்வையினிலே
என் உள்ளம் அவள் நினைவினிலே
அவள் என் சுவாசம் என் மூச்சினிலே
பொங்குவாள் என் நெஞ்சினிலே
நான் பைத்தியம் அவளை பற்றி எழுதுவதிலே
நேற்று அவள் என் கனவினிலே
இன்று அவள் என் நினைவினிலே
நாளை நாங்கள் கல்லறையிலே

உள்ளங்கையில் உன் முகம் தெரிந்தது
உற்றுப் பார்க்கையில் ஓர் பொழுது கடந்தது

வாணி வந்தாள் வென்று சென்றாள்
விலகிச் செல்கிறாள் வேங்கையில் நான் என்ன செய்யேன்?

மின்னல்கள் சிரிப்பது எப்பொழுது இடியுடன் கூடிய மழை பொழிவது எப்பொழுது

நடுவானில் உன் மீது பொழிந்தாலும்
நட்சத்திரமாய் பொழிவேன் அடி
நாடு கடந்து வந்தே அடி
நறுமுகையே நெஞ்சம் முழுவதும் நீ தான் அடி

என்ன புடிச்சிருக்கா ?
புடிச்சிருந்தா சொல்லு
அன்றைய நாள் காதலிக்கலாம்
மறுநாள் கலியாணம் செஞ்சுக்கலாம்

என்னுள் எங்கிருக்கிறாய் சொல்லிவிடு
எண்ணும் எண்ணமாய் ?
பார்க்கும் பார்வையாய் ?
கேட்கும் ஒலியாய் ?
உண்ணும் உணவாய்?
சுவாசிக்கும் மூச்சாய் ?
எழுதும் கவிதையாய் ?
மனதில் மகிழ்ச்சியாய் ?
இதய துடிதுடிப்பாய் ?
வழிபடும் கடவுளாய் ?
பேசும் செந்தமிழாய் ?
நாம் கொஞ்சும் குழந்தையாய் ?
குருதியில் தாய்ப்பாலாய் ?
வாழ்வில் வாழ்வாய் ?

வெண்ணிலா மேக படி இறங்கி பூமியில் சென்றது
(on seeing in the side mirror of the bus while she got down)

உன் கன்னக்குழியில் என் கண்களை வைத்தேன்
உன் இமைகளில் என் இதயத்தை வைத்தேன்

உன்னிடம் நீ போராட வேண்டும் என்றால் காதலித்துப்பார்

உனை காண கண்களை படைத்தவன்
எதற்க்காக இதயத்தை படைத்தான் ?

நீ அடித்தால் மறு கன்னத்தையும் காண்பிப்பேன்

நிலவில் ஒளி படைத்தவன் உன் மனதில் ஈரம் வைத்தானோ ?

நீராய் வந்தாய்
நெருப்பாய் வந்தாய்
நறுமுகையாய் வந்தாய்
நடுநிசியில் வந்தாய்
நெற்கதிராய்  வந்தாய்
நித்திரையாய் வந்தாய்
நிறைமனதாய்  வந்தாய்
நாணமாய் வந்தாய்
நாதமாய் வந்தாய்
நவமணியாய் வந்தாய்
நிகரேது என வந்தாய்
நட்சத்திரங்களாய் வந்தாய்
நிலவாக வந்தாய்
நிழலாக வந்தாய்
நெஞ்சத்தில் வந்தாய்
நீளமேகமாய் வந்தாய்
நீளதாமரையாய் கையில் வந்தாய்
நிம்மதியாய் வந்தாய்
நினைவாய் வந்தாய்
நெற்றிகண்ணாய் வந்தாய்
நெருங்கி எப்போது வருவாய் ?

உன் முகம் காணாமல் உறைந்தேன் அடி
உன் நிழல் கண்டு நின்றேன் அடி
என் நினைவில் வந்தாய் அடி
நிழலாய் கலந்தாய் அடி
என் அருகே நெருங்கி வாடி
என்னை உன் நினைவில் கொள்ளடி

என்ன நினைத்தேனோ
ஏது நினைத்தேனோ
எண்ணங்கள் ஏதும் புரியவில்லை

இரு விழிகள் ஒர் பார்வைக்கு
இரு மனம் ஒர் வாழ்க்கைக்கு

நீ சிரித்தால் கொள்ளை அழகு
வாய் விட்டு சிரித்தால் உயிர் கொல்லும் அழகு

உன் மௌனம் சுந்தர கவிதை சுறக்கும் உற்று

நின்னை கண்டு நாணம் செவ்வானத்தை தண்டித்து

கையில் ஏந்தி மலையேறி உனை எட்டி பார்க்கிறேன் மானே
எங்கு மறைந்து கொண்டாய்
(on sunrise)

இன்று உன் அருகில் உன் மூச்சு காற்றை சுவாசித்த போது முதன் முதலாய் தாய்ப்பால் அருந்திய பரவசம் உணர்ந்தேன்

கண் விழித்துகொண்டிருந்த பொழுது விழியில் மறைந்து கொண்டாய் ?
கண் மூடி கொண்டு உறங்குகிறேன் உறக்கம் வரவில்லை
என்ன செய்ய போகிறாய் என அறியமுடியவில்லை
நீ செய்யும் மாயைகள் எத்தனை கோடி இன்பம்
கண் விழிக்க ஆசை இல்லை பொன்னமா

கலவரம் உண்டு
கானல் உண்டு
களிப்பு உண்டு
களவு உண்டு
கோவம் உண்டு
கண்ணியம் உண்டு
கோர்வை உண்டு
கசப்பு உண்டு
கற்க உண்டு
காத்தல் உண்டு
காலம் உண்டு
காத்திருப்பு உண்டு
கடமை உண்டு
கட்டுப்பாடு உண்டு
கனவு உண்டு
கற்பனை உண்டு
கவிதை உண்டு
இவை யாவும் காதலில் உண்டு

மின்னலினில் உன் முகம் எப்படி தெரியும். நீ முக கண்ணாடி பார்ப்பாயோ ?

உன் நினைவு வருகையில் நித்திரை இழந்தேனடி
உன் அருகில் வருகையில் உள்ளம் குளிருதடி
உன் கண் நோக்கினால் கள்வெறி கொண்டேனடி
நீ என் பெயர் உச்சரிக்கையில் நினைவிழந்தேனடி

தனியாய் உனது பீம்மமாய்
ஒரு துளியாய்
உன் இலையில் இருப்பேன் தாமரையே

குறிஞ்சி

எப்ப பாத்தாலும் வானம், பூமி, நிலா, நிலம், காற்று என்று எழுதி சலிப்பு வந்து விட்டது .. அதனால் வேறோர் களத்தில் உனக்காக எழுதுகிறேன்

கடை வீதியில் கால் முளைத்து காலி ப்ளவரும் உன் பின் வரும்

இலையுதிர் காலத்தில் இலை குற்று:
பல்லாயிரம் இலைகளில் என்னை மட்டும் காற்றாய் வந்து கைபிடித்து கூட்டி சென்றாய்,  வழியில் நாம் ஆடிய நர்த்தனம் நெஞ்சம் மறக்காதடி,  விண்ணில்  நம் வாழ்வை எப்படி சொல்வேன் அடி!

மொத்தனும் குத்தனும் 
மொத்தனும் குத்தனும் 
மொத்து மொத்துனு மொத்தனும்
குத்து குத்துனு குத்தனும் 

பழைய போர்வையில் வெள்ளி முத்துக்கள்

உள்ளம் உனக்கென துறந்தேன்
உயிர் உனக்கென துறவேன்
உன் செம்பவள வாயினால்
என்னிடம் ஓர் வார்த்தை மொழிவாயோ ?

டேய் அவள கொல்ல போறேன் டா

விடியலில் விழி விரிக்கையில் கமலமே உன் முகம்

காலையில் கண் விரிக்கையில் கமலமே உன் முகம்

உன் நினைவில் என்னை நிறுத்திக்கொள்வாயோ
என் எண்ணங்களை ஏற்றுக்கொள்வாயோ
உன் மரணத்தில் என்னை மன்னிப்பாயோ?

உன் முகம் காணாமல் உறைந்தேன் அடி
உன் நிழல் கண்டு நின்றேன் அடி
என் நினைவில் வந்தாய் அடி
நிழலாய் கலந்தாய் அடி
என் அருகே நெருங்கி வாடி
என்னை உன் நினைவில் கொள்ளடி

யார் தொடங்க என்று இருவருக்கும் தெரியவில்லை

மௌனத்தை இருவரும் தொடங்கி விட்டோம்
இருவருக்கும் பிடிக்கவில்லை

வள்ளுவன் வெண்பாவை தவிர வேறேதேனும் எழுதினால் அது உன்னை பற்றி தான் இருக்கும்

பிறப்பில் இறப்பை அறியேன்
இறப்பில் மறுபிறப்பை அறியேன்
விண்ணில் நட்சத்திரங்களை அறியேன்
மண்ணில் மாந்தர்களை அறியேன்
வானவிலின் வண்ணங்களை அறியேன்
நேற்று உன்னை அறியேன்
இன்று உன்னை மட்டும் அறிவேன்
நாளை நீ எனக்கா என அறியேன்

"பஸ்சில் இடம் கொடுத்த நங்கையின் மனதில் இடம் பிடித்தாயா?" என கவிதையாய் கேட்டாள் என் பாட்டி.

கண்ணில் இருந்து கனவில் தாக்குகிறாய்
நெஞ்சத்தில் இருந்து நினைவை தாக்குகிறாய்
மனதில் இருந்துவிடு மரணம் தாக்காதடி

கடல் உன் கரங்கள் அளவு நீளம் அடி
இமயமலை உன் காலளவு உயரமடி
நிலவு உன் முகம் அளவு வட்டம் அடி
அகில லோகமும் உன் உள்ளம் அடி

அஞ்சாமல் அஞ்சல் எழுதினேன்
ஆயிரம் எழுதினேன் ஆருயிரே
ஆயினும் அன்பே அஞ்சல் பெட்டியில் ஒன்றை கூட சேர்க்கவில்லை

கண்ணில் இருந்து கனவில் தாக்குகிறாய்
நெஞ்சத்தில் இருந்து நினைவை தாக்குகிறாய்
மனதில் இருந்துவிடு மரணம் தாக்காதடி

சூரியனும் சமூத்திர முக கண்ணாடியில் சில நாழிகை முகம் பார்க்கிறான்
ஆனால் சமூத்திரமோ நாணம் கொண்டு செந்தழலாய் அலைந்தது

பேரமைதி

நம்ம ரசிச்சு ரசிச்சு நேசிச்ச பொண்ணு
நம்மகிட்ட முகம் கொடுத்த பேசலானா
அந்த வலி இருக்கே, நம்மள பொறட்டி எடுத்துரும்
வேலை இல்லனா வீட்டுக்கு போய் தூங்க பிடிக்காது,
யார்கிட்டயும் பேச பிடிக்காது,
அப்படியே போன்'ல பேசினா ரெண்டு நிமிஷத்துல
போன்'எ வைக்க தோனும்,
நண்பன், நண்பன் டா'னு - இப்ப நீ தான் டா முடிவு எடுக்கணும்,
வேலைய பாத்துனு போ'னு சொன்னா,
மனசு சுத்தமா காதுல வாங்காது, போடான்னு சொல்லும்,
இந்த விஷயம் தெரிஞ்ச நட்பு வட்டாரத்துக்கு கிட்ட
இத பத்தி ரொம்ப கேள்வி கேக்காதனு சொல்லிடும்
மூனு மாடிய பதினச்சு வினாடில ஏறுகிறவன்
பொறுமையா மூச்சு விட்டுன்னு தலைய தொங்கப் போட்டு
பாதி கால் வெச்சு ஒரு ஒரு படியா ஏறுவான்
என்ன ஆனாலும் அவ மேல கோவம் மட்டும் வரல
இன்னும் அழகா இருக்கா மனசு நிறையா இருக்கா

என் வலி என்னோட இருக்கட்டும் எனக்கு இது புடிச்சிருக்கு

என் கண் பாரடி கிளியே
என் கண் பாரடி கிளியே
என் மீது ஏன் கோபம் கொண்டாயோ
ஏன் மறுத்தாயோ
எண்ணி பார்த்தால்
எள்ளளவும் தோன்றவில்லை
என் ஏழுலகமும் நீ தான் அடி!
என்றும் உன்னை மறவேன் அடி
என் கண் பாரடி கிளியே !

துயிலிலும் துள்ளி துள்ளி வரவில்லை
நேரிலும் தள்ளி தள்ளி செல்கிறாய்

நிலவில் என்னை நினைத்துக்கொள்
மண்ணில் என்னை மணந்துக்கொள் அல்லது
என் மரணத்தில் என்னை மண்ணித்துவிடு