உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

மண் வாசம்


உலகத்துல அவ்வளவு நகரம் இருந்தும் நான் ஏன் டெல்லிக்கு வந்தேன் ? டெல்லியில் அவ்வளவு இடங்கள் இருந்தும் நான் ஏன் ஜனக்புரி வந்தேன்? ஜனக்புரியில் இரண்டு பேருந்துகள் இருக்கும்போது நான் ஏன் நான்காம் எண்   பேருந்தில் வருகிறேன்? எனக்கு பிறகு அத்தனை பேர் ஏறும்பொழுது நான் ஏன் ர.கா'க்கு பிறகு ஏற வேண்டும் ?

அவள் உறங்கும் போது நான் கண் இமைக்க மாட்டேன். ஏனெனில் அப்பொழுது தான் தைரியமாக அவள் கண்களை எதிர்க்கொள்ள முடியும். 
(I can touch the live wire only when there is no electricity)


ஆழ்ந்த உறக்கம்
லயித்து போகும் பேரமைதி


கொள்ளை கொள்ளும் அமைதி
நெஞ்சை கொள்ளை கொள்ளும் பேரமைதி
அவள் முகம்தனில் குடிகொண்டு உள்ளது


ஆடி வரும் தேன் துயில் கொள்ளும் அழகையே வையகத்தில் பரவசம் என்று எண்ணிணேன். அது தவறல்ல எனினும் மற்றுமோர் பரவசத்தை உணர்ந்தேன் இன்று.