உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

புயலுக்குப் பின் அமைதி


உன்னால் என்னுள் கருவாயிருந்த கவிஞனை கை பிடித்தாயோ? 
சில யுகமாய் கவிதை எழுதவில்லை!

வியந்தேன் வியந்தேன் வியந்தேன்
வியக்க வியக்க வியந்தேன்
என்னுள் என்ன விந்தை செய்தாய் என வியந்தேன்
விடியும் வரை வியந்தேன்

விண்ணில் வெண்ணிலாவை கண்டு வியந்தேன்
வெண்ணிலவை உன் குண்டலமாய் கண்டு வியந்தேன்

விண்ணிலிருந்து விழும் பூக்களை கண்டு வியந்தேன் 
அவை உன்னக்கென என்பதை உணர்ந்து வியந்தேன் 

வானவிலின் வண்ணங்கள் கண்டு வியந்தேன்
அவ்வண்ணங்கள் உன் கூந்தலில் மிளிர்வதை கண்டு வியந்தேன் 

வாரணங்களின் தந்தங்கள் கண்டு வியந்தேன்
வஞ்சியே உன் கை விரல்கள் கண்டு வியந்தேன்

வேகமாய் சிறகடிக்கும் பறவைகள் கண்டு வியந்தேன்
பெண்ணே உன் இமைகள் சிமிட்டுவதை கண்டு வியந்தேன்

வனத்தில் பசுமை கண்டு வியந்தேன்
வஞ்சியே உன் அமைதி கண்டு வியந்தேன்

வாயிலில் திண்ணை கண்டு வியந்தேன்
திண்ணையில் நாம் பழகிய காலம் கண்டு வியந்தேன்

விடியலில் செவ்வானத்தை கண்டு வியந்தேன்
உன் துயில் களைத்ததற்கு கோபம் கொண்டாயோ என வியந்தேன்
அல்லது வேங்கை என் வருகையில் வெட்கம் கொண்டாயோ என வியந்தேன்

வீதியில் நாம் நடந்ததை வியந்தேன் 
என் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தாயே! வியந்தேன்!

வையத்தில் வானி(ணி) உனை வியந்தேன்
என்னுள் ஏன் என வியந்தேன்!

ஊர்ல அவன் அவன் ஆயிரம் Onsiteபோறான். அஞ்சு வருஷம் கழிச்சி மொத(முதல்)  Onsite கொரியா வந்து முதல் Testing  நான் பட்றப்பாடு இருக்கே ... அய்அய்அய்யோ

கவிதையும் வரவில்லை காதலும் வரவில்லை 
கலைமானே கண் மூடினால் உன் கண்கள் தான் கனவில் வருகிறது!

மச்சான் அழுக அழுகையா வருது டா

மச்சி அழுக அழுகையா வருது டி
ஓஹ்யோன் ஓஹ்யோன் ஓஹ்யோன் 

மௌனம்