உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அதில் ஈரம் எஞ்சும்
- வைரமுத்து

அர்த்தமுள்ள இவ்வரிகளுக்கு என்னுள் உயிர் கொடுத்தவளே, உன்னை பற்றி .....

படித்திவிட்டு ...

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்

Mar 29, 2011

பருவ மழை


மழையோடு நனைய குடையோடு சென்றேன் 

நான் மேகமாக இருந்தால் உன் மேல் மழையாய் பொழிந்து உன் வெட்பத்தை அணைப்பேன் 

அவள் என் அருகில் இருந்தால் மேகம் என் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன். சற்று தொலைவில் இருந்தால் நான் செயலற்று இருந்தேன் 

உன்னருகில் என்னை உணர்ந்தேன், என்னுள் உன்னை உணர்ந்தேன் 

என்னுடன் உரையாடாமல் கூட இரு ஆனால் என் அருகில் இரு 

மறவாதே நீ என்னை விட்டு விலகும் போது என் சுவாசத்தை எடுத்து  செல்கிறாய்.விரைவில் வந்து விடு ஏனெனில் என் இதயத்திற்கு தெரியும் நீ தான் என் ஸ்வாசமென்று ஆனால் என் நுரையீரலுக்கு அது தெரியாது  

தண்ணீரில் உள்ள நுண்கிருமிகள் விழிகளுக்கு தென்படுகின்றன ஆனால் உன் பார்வையின் அர்த்தம் புலப்படவில்லை

சில இரட்டையர்களுக்கு உடலை ஒன்றாக இணைத்து படைக்கிறான், ஏன் உனது இதயத்தை என் இதயத்துடன் இணைத்து என் உடலிற்குள் வைத்து படைக்க கூடாது . 

நீ நிற்கும் இடத்தில நான் பூக்கள் பொழியும் மரமாக இருப்பேன் 

கடல் சங்கினில் அலையோசை கேட்கும். என் இதயத்தில் நீ என்னிடம் பேசிய வார்த்தைகள் தான் ஒலிக்கும் 

சந்திரனும் சூரியனும் நேர் நேரே சந்தித்துகொள்வது வைர மோதிரத்தை அணிந்துகொள்ளத்தான் 

நான் பேருந்தில் உறங்கும் பழக்கத்தை வேருடன் களைந்தவளே  நீ தான் 

உன்னை இன்றி யார் என்னை காதலிக்க முடியும்

ஆறாக நீ இருந்தால்  கரையாக இருபுறமும் இருப்பேன் 

என்று முடியும் இந்த வேள்வி 

இந்த பூவுலகத்தை படித்தவன் எனக்கென்று புதையல் படைத்தான் என்றால்  அது நீ தான் 

நீ உறங்கும் பொழுது தலை அசைக்கும் லயத்தை ரசித்தேன். அது ஆதி தாளமா அல்லது ரூபக தாளமா

உங்க அப்பாவுக்கு என்ன புடிச்சிருக்கும்
உங்க அம்மாவுக்கு என்ன புடிச்சிருக்கும்
உங்க பாட்டிக்கு என்ன புடிச்சிருக்கும்
உங்க மாமா தாத்தாவிருக்கு என்ன புடிச்சிருக்கும்
நம்ம மகிழ்ச்சியா வாழலாம் 
இது நல்லா  வரும்
இது நடக்கும்

குளத்தில் குனிந்து பார்த்தால்
உன் முகம் தெரிகிறது

உன் விரல்களை பார்த்தால் குழந்தைகள் எனக்கு ஞாபகத்திருக்கு வருகின்றன 

'ரா"' என்று என் துயிலை களைவாள் என்றால் நான் நிமிடங்கள் உறங்குவேன் (அவள் உறங்கும் பொழுது பேருந்து அவள் நிறுத்தகத்திற்கு சிறிது தொலைவில் இருந்து உறங்குவேன்) 

நாளும் உன்னுடன் பேருந்தில் பயணிக்கும் வழியில் இன்று நீ இல்லாமல் பயணிக்கும் பொழுது இவ்வழியில் முதல் முறை பயணிப்பதுபோல் உணர்கிறேன் 

நான் பிள்ளை போலே, என் பிஞ்சு விரல்களை உன் கையுடன் கோர்த்து, துள்ளிக்கொண்டே நடக்க வேண்டும்